×

மூதாட்டி வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் நகை திருட்டு

 

விழுப்புரம், மே 8: விழுப்புரம் அருகே மூதாட்டி வீட்டை உடைத்து 4 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் அருகே மருதூரைச் சேர்ந்தவர் தமிழரசி (32). இவர் திருமணமாகி சேந்தனூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் மருதூரில் உள்ள இவருடைய தாய் கஸ்தூரிக்கு (68) உடல்நிலை சரியில்லாததால் அவரை கடந்த 5ம் தேதி சென்னை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு அவருடன் இருந்தார்.

இந்நிலையில் நேற்று வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 4 பவுன் நகை திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மூதாட்டி வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் நகை திருட்டு appeared first on Dinakaran.

Tags : Viluppuram ,TAMILHARASI ,MARUTHUR ,VILUPURAM ,Santanur ,Ancestor ,
× RELATED ஓய்வூதியர் தின விழா