தேனி, மே 8: தேனி அருகே வீரபாண்டியில் உள்ள கவுமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இத்திருவிழா வருகிற 13ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்வர்.
இதனையொட்டி, கோயில் பின்புறம், கம்பம் சாலையில் தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை சார்பில், திருவிழா நடக்கும் 8 நாட்களுக்கும் 24 மணி நேர இலவச மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இம்முகாமினை தேனி எம்பி தங்கதமிழ்செல்வன், வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதாசசி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். மேலும் எம்.பி தங்கதமிழ்செல்வன் பரிசோதனையை செய்து முகாமினை துவக்கி வைத்தார். இதில் வீரபாண்டி பேரூர் திமுக செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் appeared first on Dinakaran.
