×

கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்க்கும் முகாம் நடைபெற்றது!

கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் ஆர்வமுடன் 43 ஆண்கள், 10 பெண்கள் என மொத்தம் 53 பேர் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் சரி பார்ப்பு, உயரம் மற்றும் எடை அளவீடு ஆகியன மேற்கொள்ளப்பட்டன. தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள், மாநகர காவல் துறையினருடன் இணைந்து பொதுமக்களின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

 

The post கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்க்கும் முகாம் நடைபெற்றது! appeared first on Dinakaran.

Tags : Municipal Home Guard ,Coimbatore Police Training School ,Dinakaran ,
× RELATED முதலமைச்சரின் விரிவான மருத்துவக்...