×

உழைப்பாளர் தினம்: தலைவர்கள் வாழ்த்து

சென்னை: உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

* அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: உழைப்பும் அர்ப்பணிப்புமே நம் நாட்டைக் கட்டமைக்கிறது. உழைப்பே உயர்வு தரும்; மனநிறைவு தரும்; ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு, தளர்வறியா உழைப்பின் மூலம் நம் நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் ‘மே’ தின நல்வாழ்த்துகள்.

* மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: போராடினார்கள். தியாகம் செய்து பெற்ற உரிமையைப் பேணிப் பாதுகாக்கவும், தொழிலாளர் வர்க்கம் ஓரணியில் நின்று போராடவும் மே நாளில் உறுதியை மேற்கொள்வோம்.

* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம்: தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி நேரமாக வரையறை செய்யப்பட்ட அடிப்படையில், அவர்கள் 8 மணி நேரம் வேலை செய்திருந்தாலும், உற்பத்தி உலக அளவில் பெருகியுள்ளது. உற்பத்தி பெருக்கத்திற்கு தொழிலாளர்களும், அவர்களது நவீன கண்டுபிடிப்புகளும் பேருதவி செய்துள்ளன. ஆனால் முதலாளித்துவம், தொழிலாளர்களை மென் மேலும் சுரண்டுகிற வகையில், சட்டங்களை திருத்தி, உரிமைகளைப் பறிக்க முயற்சிக்கிறது, இந்த அநீதிகளுக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.

* இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் : பெரும்பான்மை மத பாசிசத்தை முறியடித்து, ஜனநாயகத்தை பாதுகாக்க மே தின நாளில் உறுதி ஏற்போம்.

* தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: பண மதிப்பிழப்பு, பொறுத்தமற்ற சரக்கு மற்றும் சேவை வரி, பணவீக்கம் போன்ற காரணங்களால் தொழில் வளர்ச்சி இல்லாத நிலையில், பொருளாதார பேரழிவு காரணமாக தொழிலாளர்கள் வாழ்வில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறார்கள். அவர்கள் தங்களது உரிமைகளை பாதுகாக்கின்ற வகையில், குரல் எழுப்பும் நாளாக மே 1ம் தேதி அமைய வேண்டும்.

* பாமக நிறுவனர் ராமதாஸ்: அமைப்புசாரா தொழிலாளர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைத்து தரப்பு மக்களுக்கும் நியாயமாக வழங்கப்பட வேண்டிய உரிமைகளும், அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும். அதை உறுதி செய்வதற்காக போராடுவதற்கு இந்நாளில் பாட்டாளிகள் அனைவரும் உறுதியேற்போம். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

The post உழைப்பாளர் தினம்: தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Labour Day ,Chennai ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டை மையமாக வைத்து கூடுதல்...