சிவகாசி, ஏப்.28: சிவகாசியில் மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம், சிவகாசி புது தெருவை சேர்ந்தவர் கருப்பையா மகன் ராஜா (32). இவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் உள்ள மின்மோட்டாரை ஆன் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மின்சாரம் தாக்கி வாலிபர் பலி appeared first on Dinakaran.
