×

தமிழ்நாடு ஆளுநரை பதவியிலிருந்து நீக்க வேண்டும்: – முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு தமிழ்நாடு முதலமைச்சர், துணைவேந்தர்கள் கூட்டத்தை பாழ்படுத்தும் முயற்சியில், ரவி ஊட்டியில் துணைவேந்தர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அழைக்கப்பட்டுள்ளார். இது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முற்றிலும் அவமதிப்பதாகும். ரவி எப்போதும் ஆளுநர் பதவியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பவராக இருந்து வருகிறார். அவரது சமீபத்திய நடவடிக்கைகள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழுக் கூட்டம், ரவியை தமிழ்நாட்டின் ஆளுநர் பதவியில் இருந்து நீக்குமாறு இந்தியக் குடியரசுத் தலைவரைக் கேட்டுக் கொள்கிறது.

The post தமிழ்நாடு ஆளுநரை பதவியிலிருந்து நீக்க வேண்டும்: – முத்தரசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Governor ,Mutharasan ,Chennai ,Communist ,Secretary of State ,Muttarasan ,Supreme Court ,Chief Minister of ,Tamil ,Nadu ,Ravi Ooty ,Deputy ,Jagdeep Tankar ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…