×

திருச்செங்கோட்டில் பரிதாபம்: விசைத்தறி அதிபர் மனைவி, மகளுடன் தற்கொலை

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு குமரமங்கலத்தை அடுத்துள்ள கோயக்காட்டைச் சேர்ந்தவர் வெங்கடாசலம்(55). இவர், அதே பகுதியில் விசைத்தறிக்கூடம் நடத்தி வந்தார். இவரது மனைவி நீலா (50). இவர்களுக்கு பிரீத்தி (21), ஷாலினி (16) என்ற 2 மகள்கள் உள்ளனர். கடந்த ஓராண்டுக்கு முன், மூத்த மகள் பிரீத்திக்கு திருமணமாகி, கணவருடன் ராசிபுரத்தில் வசித்து வருகிறார். நேற்று மதியம், பெற்றோர் வீட்டிற்கு பிரீத்தி போன் செய்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாக யாரும் எடுக்கவில்லை.இதனால் சந்தேகமடைந்த அவர், தனது உறவினருக்கு போன் செய்து விபரம் கூறியுள்ளார். அதன் பேரில், அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வெங்கடாசலம் உள்ளிட்ட மூவரும், வீட்டின் மாடியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து தகவல் கிடைத்து அங்கு வந்த போலீசார் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்தனர். முதல் கட்ட விசாரணையில், தற்கொலைக்கு காரணம் தெரியவில்லை என தெரியவந்துள்ளது. …

The post திருச்செங்கோட்டில் பரிதாபம்: விசைத்தறி அதிபர் மனைவி, மகளுடன் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Tiruchengode ,Venkatachalam ,Koikat ,Kumaramangalam, Tiruchengode, Namakkal district ,
× RELATED தேர்தல் பணியில் ஈடுபட்ட பெண் ஏட்டு விபத்தில் பலி