×

பங்குச் சந்தையில் 80,000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்

மும்பை: தொடர்ந்து 7வது நாளாக பங்குச் சந்தை சென்செக்ஸ் 80,000 புள்ளிகளை தாண்டியது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 521 புள்ளிகள் உயர்ந்து 80,116 புள்ளிகளானது. வர்த்தகம் தொடங்கிய உடனே 659 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் இறுதியில் 521 புள்ளிகளில் நிறைவு பெற்றது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 162 புள்ளிகள் உயர்ந்து 24,329 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 38 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்து விற்பனையாயின.

The post பங்குச் சந்தையில் 80,000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ் appeared first on Dinakaran.

Tags : Sensex ,Mumbai ,Mumbai Stock Exchange ,Dinakaran ,
× RELATED கரூர் நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது...