×

இலங்கையில் இருந்து கடத்திய ரூ.9 கோடி தங்கம் பறிமுதல்

ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னார் அருகே கடற்கரை பகுதியில் நேற்று இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது படகில் இருந்த 2 பேரிடம் சோதனை செய்தபோது, அலுமினிய உருளைகள் சிக்கின. இவற்றை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து பரிசோதித்தபோது தங்கத்தை மீன்பிடி வலை மூழ்குவதற்கு பயன்படுத்தப்படும் இரும்பு உருளைகள் போன்று, 26 உருளைகளாக தயாரித்து அதன் மேல் அலுமினிய முலாம் பூசப்பட்டிருந்தது தெரிந்தது. கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட இந்த தங்க உருளைகள் 8 கிலோ 800 கிராம் இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ. 8 கோடியே 62 லட்சம். கைதான 2 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இதில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய கடத்தல்காரர்களுக்கு தங்கத்தை கடத்தி சென்றதாக இலங்கை போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post இலங்கையில் இருந்து கடத்திய ரூ.9 கோடி தங்கம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Rameswaram ,Sri Lankan Navy ,Thalaimannar, Sri Lanka ,Dinakaran ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த நபர் கைது!