- மாவட்ட ஆளுநர்
- கள்ளக்குறிச்சி
- மாவட்ட ஆளுனர் பிரசாந்த்
- மாவட்ட வருவாய் அலுவலர்
- ஜீவா
- களகுரிச்சி தீர்வு தினம்
- தின மலர்
*மாவட்ட ஆட்சியர் உத்தரவு
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தின பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா முன்னிலை வகித்தார். முன்னதாக மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் மன வளர்ச்சி குன்றிய 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.8 ஆயிரம் மதிப்பில் ஸ்டேண்டிங் பிரேம் உதவி உபகரணங்களும், பார்வையற்ற ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.49,000 மதிப்பில் எலக்ட்ரானிக் பிரைலி ரீடரை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா, தொழில் தொடங்க கடனுதவி, சாலை வசதி, குடிநீர் வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், ஏரி, குளம் தூர்வாருதல், வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த திட்டம், காவல்துறை தொடர்பான மனுக்கள் என மொத்தம் 502 பேர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அப்போது அந்தந்த துறை அலுவலர்களை நேரில் அழைத்து பொதுமக்கள் புகார் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். முன்னதாக கடந்த வாரத்தில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். இக்குறைகேட்பு கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் அந்தோணிராஜ் மற்றும் அனைத்து துறைகளை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post கள்ளக்குறிச்சியில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 502 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் appeared first on Dinakaran.
