சென்னை: சென்னை எழும்பூரில் மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் தொடங்கியது. மதிமுக முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து துரை வைகோ நேற்று விலகிய நிலையில் நிர்வாகக் குழு கூடியுள்ளது. மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் துரை வைகோ விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பதவி விலகிய தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாக துரை வைகோ பேட்டியளித்துள்ளார்.
The post சென்னை எழும்பூரில் மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் தொடங்கியது! appeared first on Dinakaran.
