- விவசாயிகள் சங்கத்தின் 30வது தேசிய மாநாட்டுப் பேரணி
- நாகப்பட்டினம்
- அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 30வது தேசிய மாநாடு
- தமிழ்
- தமிழ்நாடு
- விவசாயம்
- விவசாயிகளின்…
- தின மலர்
நாகப்பட்டினம், ஏப். 18: அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 30வது தேசிய மாநாட்டை முன்னிட்டு நாகப்பட்டினத்தில் பேரணி நடந்தது. அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 30வது தேசிய மாநாடு நாகப்பட்டினத்தில் கடந்த 15ம் தேதி தொடங்கியது. தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மாநாட்டை தொடங்கி வைத்தார். கேரள மாநில வேளாண் துறை அமைச்சர் பிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் பேசினர். 16ம் தேதி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நேற்று (17ம் தேதி) நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய தலைவராக ராஜன் கிஸ்சிசாகர், அகில இந்திய பொது செயலாளராக ராவுலவெங்கையா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாலை நாகப்பட்டினம் அவுரித் திடலில் இருந்து மாநாட்டு பேரணி தொடங்கியது. பேரணியில் அகில இந்திய அளவில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பேரணி நாகப்பட்டினம் காடம்பாடியில் நிறைவு பெற்றது. அங்கு அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் து.ராஜா, மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் பலர் பேசினர்.
The post நாகப்பட்டினத்தில் விவசாயிகள் சங்க 30வது தேசிய மாநாடு பேரணி appeared first on Dinakaran.