×

தமிழகத்தில் இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும்: வானிலை மையம்!

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வடதமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவற்றின் தாக்கத்தால் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 96.8-98.6 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 84.2 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழகத்தில் இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும்: வானிலை மையம்! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Meteorological Centre ,Gulf of Mannar ,South West Bengal ,
× RELATED காணும் பொங்கலன்று மெரினாவில் குளிக்க...