×

போலி நகை மூலம் ரூ.35 லட்சம் மோசடி: கூட்டுறவு சங்க எழுத்தர் தற்கொலை


உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் இளநிலை எழுத்தராக பூச்சிபட்டியைச் சேர்ந்த செல்லாண்டி (55) பணியாற்றி வந்தார். இச்சங்கத்தில் கடந்த மாதம் வருடாந்திர தணிக்கை நடந்தது. இதில், கடந்த 2022 முதல் போலி நகைகளை அடகு வைத்து நகை கடன் பெற்றதில், ரூ.35 லட்சத்திற்கும் அதிகமாக மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கத்தினர் ஒன்றிணைந்து மோசடி செய்த தொகையை செலுத்த வேண்டும்; துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த மோசடிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தன்னை தொடர்புபடுத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறி மன உளைச்சலுக்கு ஆளான எழுத்தர் செல்லாண்டி, நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இதுகுறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post போலி நகை மூலம் ரூ.35 லட்சம் மோசடி: கூட்டுறவு சங்க எழுத்தர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Cooperative ,Usilampatti ,Poochipattai ,Nakkalapatti Primary Agricultural Cooperative Society ,Madurai district ,Dinakaran ,
× RELATED காணும் பொங்கலன்று மெரினாவில் குளிக்க...