- ஜெயலலிதா
- எடப்பாடி சிங்கக்குட்டி
- செலூர் ராஜு
- மதுரை
- அஇஅதிமுக
- சட்டமன்ற உறுப்பினர்
- பூமி பூஜா
- மதுரை மேற்கு
மதுரை: ஜெயலலிதா சிங்கப்பெண் என்றால், எடப்பாடி சிங்கக்குட்டி என செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையில் அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜூ நேற்று பங்கேற்றார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூட்டணி என்பது தேர்தலுக்கு முன்பாக கூட அமையும். அதெல்லாம் தேர்தல் வியூகம். ஊடகங்கள் கற்பனையாக வசனங்கள் எழுதுகின்றன. எடப்பாடி – மோடி சந்திப்பு குறித்து எழுதும் போது ஊடகங்கள் எங்களை பற்றிய கற்பனை உலகத்திற்கு செல்கிறது.
எங்கம்மா எட்டடி பாய்ந்தார் என்றால், எடப்பாடி 16 அடி பாய்வார். ஜெயலலிதா சிங்கப்பெண் என்றால், எடப்பாடி அவர் வழியில் வந்த சிங்கக்குட்டி. கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளரிடம் கேளுங்கள். பாமக கட்சி விவகாரம் என்பது குடும்ப விவகாரம். அதைப் பற்றி பேச வேண்டாம். அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென பாஜ தலைமையிடம் எடப்பாடி கூறவில்லை. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக அதிமுக தலைமையில் ஆட்சி அமையும். இவ்வாறு கூறினார்.
The post ஜெயலலிதா சிங்கப்பெண் எடப்பாடி சிங்கக்குட்டி: செல்லூர் ராஜூ ‘லக… லக’ appeared first on Dinakaran.
