×

மின்வெட்டு புகாரே இல்லை; கோடையில் தடையின்றி சீரான முறையில் மின்சாரம்: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

கோவை: தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் நேற்று அளித்த பேட்டியில், உச்ச நீதிமன்றம் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்து இருப்பது தமிழ்நாடு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் வழிகாட்ட கூடிய ஆளுமையாக வழிகாட்ட கூடிய தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளங்கி வருகிறார். நமது உரிமையை மீட்டு எடுத்துள்ளார்.

முதல்வர் சிறப்பான ஒரு முன்னெடுப்பை எடுத்து நீதிமன்றத்தின் மூலம், அதனை நிலை நாட்டி இருக்கிறார். வரக்கூடிய எதிர்கால சந்ததியினரும் இதனை தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் நீதிமன்றம் மூலம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை முதல்வர் பெற்று தந்து இருக்கிறார். தட்டுப்பாடு காரணமாக மின்வெட்டு என்ற புகார் இதுவரை இல்லை.

ஏதாவது பழுது காரணமாக மின்வெட்டு ஏற்பட்டு இருக்கலாம். தேவைக்கு அதிகமான மின்சாரம் தற்போது நமக்கு கிடைத்துக்கொண்டு இருக்கிறது. கோடை காலத்தில் மிக சிறப்பாக எந்தவித தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் கிடைக்க வழிவகை செய்து கொடுக்கிறோம் என்றார்.

The post மின்வெட்டு புகாரே இல்லை; கோடையில் தடையின்றி சீரான முறையில் மின்சாரம்: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister Senthil Balaji ,Coimbatore ,Tamil Nadu ,Minister ,Senthil Balaji ,Supreme Court ,India… ,Dinakaran ,
× RELATED கரூர் நெரிசலில் 41 பேர் பலியான இடத்தில்...