மார்த்தாண்டம், ஏப்.10: மார்த்தாண்டம் விரிகோடு கோணம் பகுதியை சேர்ந்தவர் ராம கிருஷ்ணன் (56). விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது பைக்கில் பழையகடை பகுதியில் இருந்து மாமூட்டுக்கடை பகுதி நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது நெட்டியான்விளையை சேர்ந்த ஹாரிஸ் (25) என்பவர் பைக்கில் சாலையை கடக்க முயன்றார். அந்த சமயத்தில் இருவரின் பைக்குகளும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இதில் தூக்கிவீசப்பட்ட ராமகிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
ஹாரிசும் காயமடைந்தார். இருவரும் மீட்கப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆனால் ராமகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஹாரிசுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராமகிருஷ்ணனின் மகன் ராஜேஷ் (25) மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் பைக்கை அஜாக்கிரதையாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியதாக ஹாரிஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மார்த்தாண்டம் அருகே பைக்குகள் மோதல் விவசாயி பரிதாப சாவு appeared first on Dinakaran.
