×

கவுன்சிலர்கள் நீக்கம்: ஏப்.21ம் தேதிக்குள் பதில் தர அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: 4 கவுன்சிலர்கள் பதிவி நீக்கம் செய்யப்பட்டதை குறித்து ஏப்ரல்.21ம் தேதிக்குள் பதில் தர அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதவி நீக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள், உசிலம்பட்டி நகராட்சி தலைவர் ஐகோட்டில் வழக்கு தொடர்ந்தார். சென்னை மாநகராட்சி 189வது வார்டு கவுன்சிலர் பாபு, கே.பி.சொக்கலிங்கம், உசிலம்பட்டி கவுன்சிலர் சகுந்தலா வழக்கு தொடர்ந்தனர். கவுன்சிலர்கள் அளித்த பதில் மீது ஆணையர் கருத்து தெரிவிக்க வேண்டியதில்லை என நீதிபதி தெரிவித்த நிலையில், கவுன்சிலர்கள் பதிலை ஆணையருக்கு அனுப்பியது ஏன் என கேள்வி எழுப்பி வழக்கு விசாரணையை ஏப்.21-க்கு ஐகோர்ட் ஒத்திவைத்தது.

The post கவுன்சிலர்கள் நீக்கம்: ஏப்.21ம் தேதிக்குள் பதில் தர அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : HC ,Chennai ,Madras High Court ,Chennai Corporation ,Usilampatti Municipality ,Court ,
× RELATED போக்சோ வழக்கில் விடுதலையானவருக்கு 10...