×

ஓமன் அருகே படுகாயத்துடன் நடுக்கடலில் தவித்த பாக். மீனவருக்கு இந்திய கடற்படை சிகிச்சை

மும்பை: ஓமன் அருகே மீன்பிடி படகில் படுகாயத்துடன் கடலில் தவித்த பாகிஸ்தான் நபருக்கு இந்திய கடற்படை வீரர்கள் மருத்துவ சிகிச்சை அளித்து காப்பாற்றினர். ஓமன் நாட்டில் இருந்து 350 கடல்மைல் தொலைவில் ஈரான் நாட்டை சேர்ந்த அல் உமேதி மீன்பிடி படகு கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தது. அப்போது படகின் இன்ஜினில் பணியாற்றிய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மீனவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டு உடல்நிலை கவலைக்கிடமானது. இதையடுத்து, அந்த நபரை எப்.வி. அப்துல் ரகுமான் என்ற மீன்பிடி படகிற்கு மாற்றினர்.

அந்த சமயத்தில் அரபிக் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஐஎன்எஸ் திரிகண்ட் என்ற போர் கப்பலுக்கு அவசர அழைப்பு வந்தது. இதையடுத்து திரிகண்ட் கப்பல் அங்கு விரைந்து சென்றது. போர் கப்பலில் இருந்த மருத்துவ குழுவினர் மீன் பிடி படகில் ஏறி அதில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த பாகிஸ்தான் மீனவருக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றினர். மேலும் படகில் இருந்த 11 பாகிஸ்தான், 5 ஈரான் ஊழியர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளையும் இந்திய கடற்படையினர் வழங்கினர்.

The post ஓமன் அருகே படுகாயத்துடன் நடுக்கடலில் தவித்த பாக். மீனவருக்கு இந்திய கடற்படை சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Indian Navy ,Oman ,Mumbai ,Al ,Dinakaran ,
× RELATED இந்திய ஓபன் பேட்மின்டன் இன்று தொடக்கம்..!!