திண்டுக்கல், ஏப். 5: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, புகையிலை பொருட்கள், வெளிமாநில மதுபாட்டில்கள் ரயில்களில் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் ரயில் நிலையங்களில் போலீசார் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மைசூரில் இருந்து தூத்துக்குடி வரை செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்தது.
அப்போது ரயில்வே இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையில், சிறப்பு எஸ்ஐக்கள் மணிகண்டன், தனிப்பிரிவு போலீசார் மணிவண்ணன், குமார், விவேக் ஆகியோர் அந்த ரயிலில் ஏறி முன்பதிவு இல்லாத பெட்டியில் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தனர். அந்த பையில் சுமார் 20 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் இதனை கடத்தி வந்து விட்டு சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திண்டுக்கல் வந்த ரயிலில் 20 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.
