×

அரசு அருங்காட்சியகத்தில் தொல் பொருட்கள் ஒப்படைப்பு

சிவகங்கை : சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் சிவகங்கை தொல்நடைக் குழுவினரால் அண்மையில் முத்தூர் வாணியங்குடிப்பகுதி சென்னலக்குடி கசிவுநீர் குட்டை நில மேற்பரப்பில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழி ஓடுகள், சிவப்புநிற ஓடுகள், கருப்பு நிற ஓடுகள், இரும்பு எச்சங்கள் ஆகியன ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. காப்பாட்சியர் பக்கிரிசாமி வசம் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன. சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் காளிராசா, தலைவர் சுந்தரராஜன், செயலர் நரசிம்மன், பொருளாளர் பிரபாகரன், சிவகங்கை தொல்நடைக்குழு ஆலோசகர் தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன், தஞ்சை பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவி இலக்கியவடிவு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்….

The post அரசு அருங்காட்சியகத்தில் தொல் பொருட்கள் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai Antiquities ,Sivagangai government museum ,Muttur Vaniankudi Chenlakudi ,
× RELATED தொழில் நுட்பங்களை பின்பற்றினால் எள்ளில் அதிக மகசூல் பெறலாம்