×

மக்களவையில் தன் மீது கூறப்பட்ட புகாருக்கு மல்லிகார்ஜூன கார்கே மாநிலங்களவையில் கண்டனம்!!

டெல்லி : மக்களவையில் தன் மீது கூறப்பட்ட புகாருக்கு மல்லிகார்ஜூன கார்கே மாநிலங்களவையில் கண்டனம் தெரிவித்துள்ளார். தன் மீது புகார் கூறிய உறுப்பினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் என் மீதான புகாரை நிரூபித்தால் நான் பதவி விலக தயார் எனவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சவால் விடுத்துள்ளார். என் வாழ்க்கை முழுவதும் போராட்டங்கள் நிறைந்தது, திறந்த புத்தகம் என்றும் பொது வாழ்க்கையில் உயரிய நெறிகளை கடைபிடித்து வருகிறேன், 60 ஆண்டாக அரசியலில் இருக்கிறேன் என்றும் கார்கே தெரிவித்தார்.

The post மக்களவையில் தன் மீது கூறப்பட்ட புகாருக்கு மல்லிகார்ஜூன கார்கே மாநிலங்களவையில் கண்டனம்!! appeared first on Dinakaran.

Tags : MALLIKARJUNA KARKE ,Delhi ,Mallikarjuna Kargay ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...