×

தமிழ்நாடு முழுவதும் ஏப்.5ம் தேதி சிறப்பு முகாம்: தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ஏப்.5ம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை மின்வாரிய செயற்பொறியாளர்கள் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. மின்நுகர்வோர் பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு மின்வாரியம் வேண்டுகோள் வைத்துள்ளது. மின் கட்டணம், மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் குறித்து புகார் அளிக்கலாம்.

The post தமிழ்நாடு முழுவதும் ஏப்.5ம் தேதி சிறப்பு முகாம்: தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Tamil Nadu Electricity Board ,Chennai ,Electricity Board ,
× RELATED கடும் பனிப்பொழிவால் தஞ்சை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை வரத்து குறைவு