×

சமூக வலைதளத்தில் மாணவி குறித்து அவதூறு: 3 பேர் கைது

திருவொற்றியூர்: பல்கலைக்கழக மாணவி குறித்து அவதூறு பரப்பிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மணலி, பார்த்தசாரதி தெருவை சேர்ந்த பாபுலால் மகள் ஜோதி (23), சென்னை பல்கலைக்கழகத்தில் பி.காம் படித்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து, வரன் பார்த்து வந்தனர். இந்நிலையில், ஜோதியை பற்றி தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவதாக அவரது பெற்றோருக்கு தெரியவந்தது.இதுபற்றி அறிந்து அதிர்ச்சியடைந்த ஜோதி, மணலி மகளிர் காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் செய்தார். போலீசார் விசாரணையில், இவரது உறவினரான மணலியை சேர்ந்த மாங்கிலால் (46) என்பவர், தனது கூட்டாளிகள் திலீப்குமார் (30), மாணிக் சந்த் (32) ஆகியோருடன் சேர்ந்து, குடும்ப பகை காரணமாக ஜோதியின் திருமணத்தை நடக்கவிடாமல் தடுக்க திட்டமிட்டு, அவதூறு பரப்பியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

The post சமூக வலைதளத்தில் மாணவி குறித்து அவதூறு: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Parthasarathy Street, Manali ,
× RELATED குரு பெயர்ச்சியை முன்னிட்டு...