×

10ம் வகுப்பு பொதுத்தேர்வை மாவட்டத்தில் 17,934 பேர் எழுதுகின்றனர்

சிவகங்கை, மார்ச் 28: தமிழகம் முழுவதும் பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 அரசு பொதுத்தேர்வுகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்.15 வரை வரை நடக்க உள்ளது.
இத்தேர்வை சிவகங்கை மாவட்டத்தில் 131 அரசுப்பள்ளிகள், 34 அரசு உதவி பெறும் பள்ளிகள், 74 தனியார் பள்ளிகள் உள்ளிட்ட 278 பள்ளிகளை சேர்ந்த 9,030 மாணவர்கள், 8,904 மாணவிகள் உள்பட 17,934 பேர் எழுதுகின்றனர். 105 தேர்வு மையங்களில் தேர்வு நடக்க உள்ளது. மேலும் 250 பேர் தனித்தேர்வர்களாக தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வு கண்காணிப்பில் 105 முதன்மை கண்காணிப்பாளர்கள், 105 துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள் மற்றும் பறக்கும் படை குழுவினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்வறைகளுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post 10ம் வகுப்பு பொதுத்தேர்வை மாவட்டத்தில் 17,934 பேர் எழுதுகின்றனர் appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Tamil Nadu ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை