மயிலாடுதுறை, மார்ச் 27: மயிலாடுதுறை அருகே காளி மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராமசாமி மகன் ராமராஜ் (வயது 32). மினி பஸ் டிரைவரான இவர், மயிலாடுதுறை நகரில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்து கடையில் விவசாயத்திற்கு பூச்சிக்கொல்லி மருந்து வேண்டும் என்று கூறி வாங்கி உள்ளார். பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கிய ராமராஜ் பஸ் நிலையம் அருகில் உள்ள அவையாம்பாள்புரம் பகுதியில் பூச்சி மருந்தை குடித்துவிட்டு தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவலை தெரிவித்துள்ளார். தகவலறிந்த அவரது நண்பர்கள் விரைந்து ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது ராமராஜ் மயங்கி கீழே விழுந்து கிடந்துள்ளார். உடனே ராமராஜை மீட்ட அவரது நண்பர்கள் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி ராமராஜ் பரிதாபமாக இறந்துபோனார். இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post மயிலாடுதுறையில் பரிதாபம் மினி பஸ் டிரைவர் பூச்சுகொல்லி மருந்து குடித்து தற்கொலை appeared first on Dinakaran.
