×

திருச்செந்தூரில் சைபர் குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு

தூத்துக்குடி, மார்ச் 27: தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையம் சார்பாக திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் சைபர் குற்றங்கள் குறித்த கியூஆர் கோடு விழிப்புணர்வு டிஜிட்டல் போர்டை எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தினார். மேலும் கியூஆர் கோடு ஸ்கேன் செய்வதன் மூலம் அதில் உள்ள பயன்கள் மற்றும் சைபர் புகார்கள் எவ்வாறு அளிப்பது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டியும், சைபர் குற்ற எண் 1930 மற்றும் என்ற சைபர் இணையதளம் குறித்தும் விளக்கி கூறினார்.

தொடர்ந்து திருச்செந்தூர் பொறியியல் கல்லூரியில் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட எஸ்.பி., குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் குறித்தும், பெண்கள் இணைய தளத்தை பயன்படுத்தும்போது விழிப்புடன் செயல்பட வேண்டும். ஸ்காலர்ஷிப் மோசடி போன்ற பல்வேறு சைபர் குற்றங்கள் குறித்தும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஏற்பாடுகளை தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ் தலைமையிலான சைபர் குற்றப் பிரிவு காவல்துறையினர் செய்திருந்தனர். மேலும் இந்த நிகழ்ச்சிகளில் திருச்செந்தூர் டிஎஸ்பி. மகேஷ்குமார் உட்பட காவல்துறையினர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் வைஸ்லின் ஜிஜி மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post திருச்செந்தூரில் சைபர் குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Tiruchendur ,Thoothukudi ,Thoothukudi Cyber Crime Division Police Station ,SP Albert John ,
× RELATED நடிகர் ஜி.பி. முத்து வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு