×

வரும் 28ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

 

தஞ்சாவூர், மார்ச் 26: தஞ்சை மாவட்ட கலெக்டர் பா.பிரியங்காபங்கஜம் கூறியிருப்பதாவதுதஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28ம் தேதி வெள்ளிக்கிழமை, முற்பகல் 10.00 மணிக்கு, தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.இதில் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது. விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று, பின் மனுக்களை அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே, விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் விவசாயம் சார்ந்த கருத்துக்களை கோரிக்கைகளாக தெரிவித்து பயன் பெற்றிடுமாறு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

The post வரும் 28ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Thanjavur District Collector ,Priyankapangajam ,Thanjavur District Farmers' Grievance Redressal Day ,Thanjavur Collector ,Grievance Redressal Meeting ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி