×

திண்டுக்கல்லில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திண்டுக்கல், மார்ச் 26: திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. கலெக்டர் சரவணன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். பேரணி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துவங்கி தலைமை தபால் அலுவலகம், பஸ் ஸ்டாண்ட் வழியாக சென்றது. பேரணியில் அரசு, தனியார் செவிலியர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டும் மற்றும் ஸ்போர்ட்ஸ் கிளப் மாணவர்கள் ஸ்கேட்டிங்கில் சென்றபடியும் காசநோய் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் உலக காசநோய் தினம் அனுசரிக்கப்பட்டது. கலெக்டர் குத்துவிளக்கேற்றி சிறப்பாக செயல்பட்ட தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட பணியாளர்கள் மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சுகந்தி ராஜகுமாரி, நுண்ணுயிரியல் துறை தலைவர் சூர்யாகுமார், இணை இயக்குநர் பூமிநாதன், மருத்துவ பணிகள் துணை இயக்குநர்கள் முத்துப்பாண்டியன், அனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல்லில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Tuberculosis eradication awareness ,Dindigul ,Tuberculosis eradication ,Government Medical College ,Hospital ,World Tuberculosis Day ,Collector ,Saravanan ,Government Medical College Hospital ,Post Office… ,Tuberculosis eradication awareness rally ,Dinakaran ,
× RELATED மக்கள் குறைதீர் கூட்டத்தில் 196 மனுக்கள் ஏற்பு