சென்னை: கள் இறக்க அனுமதிப்பது குறித்து முதலமைச்சர் எதிர்காலத்தில் பரிசீலிப்பார் என்று அமைச்சர் பொன்முடி பதில் அளித்துள்ளார். கள் இறக்க அரசு அனுமதி தருமா? ஆவின் போன்று கள் விற்பனை கூடங்கள் அமைக்கப்படுமா என சட்டப்பேரவையில் ரூபி மனோகரன் கேள்வி எழுப்பியுள்ளார். பதநீர், கள் மீதான வழக்குகளை கள்ளச்சாராயம் காய்ச்சியது போன்ற வழக்குகளாக பதியக்கூடாது. கள் இறக்கினால் அது தொடர்பாக தனியாக வழக்கு பதிய வேண்டும் என்று உறுப்பினர் அசோகன் கோரிக்கை வைத்துள்ளார்.
The post கள் இறக்க அனுமதிப்பது குறித்து முதலமைச்சர் எதிர்காலத்தில் பரிசீலிப்பார்: அமைச்சர் பொன்முடி பதில் appeared first on Dinakaran.
