×

சாலை விபத்தில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி பலி

பழநி, மார்ச் 25: பழநி அருகே சாலை விபத்தில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்தார். பழநி அருகே சத்திரப்பட்டி, வேலூரைச் சேர்ந்தவர் சக்திவேல் (63). மின்வாரியத்தில் மின் கட்டணம் கணக்கெடுக்கும் ஒப்பந்த தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு பழநி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆயக்குடி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக, பழநி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சக்திவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சாலை விபத்தில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Electricity Board ,Palani ,Sakthivel ,Chatthirapatti, Vellore ,Palani-Dindugal National Highway ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி