சாத்தூர், மார்ச் 24: சாத்தூர் அருகே என்.மேட்டுப்பட்டி தெற்குக் தெருவை சேர்ந்தவர் ராம்குமார்(24). இவர் சாத்தூரில் இருந்து ஓ.மேட்டுப்பட்டி செல்லும் மினி பஸ்சில் டிரைவராக உள்ளார். இவர் நேற்று ஓ.மேட்டுப்படியில் பஸ்சில் இருந்தார். அப்போது அங்கு வந்த சிவகாசி அருகே மீனம்பட்டியை சேர்ந்த முனியசாமி உள்பட 3 பேர் ராம்குமாரை இரும்பு ராடால் தாக்கியுள்ளனர்.
அப்போது பஸ்சில் இருந்தவர்கள் கூச்சலிடவே மூன்று பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். காயமடைந்தவரை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்தனர். இதில், முனியசாமியின் கொழுந்தியாள் உடன் டிரைவர் பேசியுள்ளார். அதை கண்டித்தும் கேட்காததால் இரும்பு ராடால் தாக்கியது தெரியவந்தது. இதை தொடர்ந்து தப்பி சென்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.
The post மினி பஸ் டிரைவருக்கு இரும்புக்கம்பி அடி appeared first on Dinakaran.