×

அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் காரணமாக தமிழகத்தில் 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் காரணமாக தமிழகத்தில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடக்கு உள் கர்நாடகா முதல் தென் தமிழகம் வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் தமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். குறிப்பாக நாளை வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசவுகரியம் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்சம் வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வும் தகவல் தெரிவித்துள்ளது.

The post அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் காரணமாக தமிழகத்தில் 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Survey Centre ,Chennai ,Meteorological Centre ,North Inner Karnataka ,South Tamil Nadu ,Meteorological Survey Center ,
× RELATED தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும்...