×

“தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” -கனிமொழி எம்.பி.

சென்னை: “தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என திமுக எம்.பி. கனிமொழி X தள பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது;

நீங்கள் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் ஏளனம் செய்வதைத்தான் இத்தனை காலமாய் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். வரலாற்றில் தமிழ் மக்களை பழித்தவர்களின் நிலை என்ன என்பதை அம்மையார் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஒரு நிமிடம் சிந்தித்துப்‌ பார்க்க வேண்டும். தமிழுக்காகவும், எங்களது உரிமைகளுக்காகவும் போராடுவது உங்களுக்கு ஏளனத்திற்கு உரியதாக தோன்றுகிறதா?. தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மறுபடியும் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

 

The post “தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” -கனிமொழி எம்.பி. appeared first on Dinakaran.

Tags : Tamils ,Tamil Nadu ,Kanimozhi M. B ,Chennai ,Dimuka M. B. ,Kanilanguage X ,Kanimozhi M. P. ,
× RELATED “சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services)...