×

பிரபல ரவுடி தூத்துக்குடி ஹைகோர்ட் மகாராஜா துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு!

சென்னை: பிரபல ரவுடி தூத்துக்குடி ஹைகோர்ட் மகாராஜா துப்பாக்கியால் சுட்டுப்பிடித்துள்ளனர். சென்னை கிண்டியில் பதுங்கி இருந்த ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட ஹைகோர்ட் மகாராஜா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடி ஹைகோர்ட் மகாராஜா. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே, சென்னை ஆதம்பாக்கத்தில் கடந்த சில நாட்களுக்குமுன் போலீசார் நடத்திய சோதனையில் தூத்துக்குடியை சேர்ந்த சில ரவுகள் கைது செய்யப்பட்டனர்.

அந்த ரவுடிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரபல ரவுடி ஹைகோர்ட் மகாராஜாவும் சென்னையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், சென்னை கிண்டியில் பதுங்கி இருந்த ரவுடி ஹைகோர்ட் மகாராஜாவை இன்று போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். ஆதம்பாக்கத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளரை கொலை செய்யும் நோக்கத்தோடும் தூத்துக்குடி ரவுடி கும்பல் சென்னைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி ஹைகோர்ட் மகாராஜா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

The post பிரபல ரவுடி தூத்துக்குடி ஹைகோர்ட் மகாராஜா துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு! appeared first on Dinakaran.

Tags : Rawudi Thoothukudi ,Highcourt ,Maharaja ,Chennai ,Rawudi ,Kindi, Chennai ,Rawudi Highcourt ,Tuticorin ,Raudi ,Thoothukudi Highcourt ,
× RELATED யாருடன் தேமுதிக கூட்டணி என்று முடிவு...