சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உப்பட்ட பகுதிகளில் புதிய பூங்காக்கள் அமைக்க மற்றும் மேம்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் 28 பூங்கா திட்டப் பணிகளுக்கு ரூ.24.43 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது. ரூ.18.48 கோடி மதிப்பில் புதிதாக 23 பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ரூ.5.95 கோடி மதிப்பில் 5 பூங்காக்கள் மேம்படுத்தப்பட உள்ளன என்றும் பெருநகர சென்னை மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது. …
The post சென்னையில் புதிதாக 23 பூங்காக்கள் அமைக்க ரூ.18.48 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.