×

தமிழ்நாடு மீனவர்கள் அனாதையா…? மாநிலங்களவையில் வைகோ ஆவேசம்

சென்னை: இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள், இந்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது..? தமிழ்நாடு மீனவர்கள் அனாதையா என மாநிலங்களவையில் வைகோ ஆவேசமாக பேசினார். மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்களை இலங்கை கடற்படையுடன் சேர்ந்து இந்திய கடற்படையும் தொந்தரவு செய்கிறது. மீனவர் பிரச்சினையில் தமிழ்நாடு மக்களை ஒன்றிய அரசு ஏமாற்றி வருகிறது என மாநிலங்களவையில் வைகோ பேசினார். இந்திய கடற்படை மீதான குற்றச்சாட்டை வைகோ திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.

The post தமிழ்நாடு மீனவர்கள் அனாதையா…? மாநிலங்களவையில் வைகோ ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Vigo obsession ,Chennai ,Sri Lanka Navy ,Indian government ,VAIGO ,NADU ,
× RELATED சொல்லிட்டாங்க…