- தேவதானப்பட்டி
- விஜயராகவன்
- வத்தலக்குண்டு கோட்டையபட்டி, நிலக்கோட்டை தாலுகா, திண்டுக்கல் மாவட்டம்
- ஆண்டிப்பட்டி
தேவதானப்பட்டி, மார்ச் 19: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, வத்தலக்குண்டு கோட்டைப்பட்டியைச் சேர்ந்தவர் விஜயராகவன் (41). இவர், கடந்த 9ம் தேதி தனது இளைய மகனின் காதணி விழாவிற்கு பத்திரிக்கை வைக்க டூவீலரில் ஆண்டிபட்டி சென்றுள்ளார். ஆண்டிபட்டியில் பத்திரிக்கை வைத்துவிட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தபோது ஜெயமங்கலம் அருகே சாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயங்களுடன் தேனி க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த விஜயராகவன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
The post விபத்தில் ஒருவர் பலி appeared first on Dinakaran.
