பழநி, மார்ச் 19: பழநி அருகே ஆலமரத்துகளத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (41). இளநீர் வியாபாரி. இவர் கடந்த பிப்.22ம் தேதி பழநி மருத்துவ நகரை சேர்ந்த முருகன் (29) என்பவரை அறிவாளால் வெட்டி கொலை செய்தார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் தற்போது சிறையில் உள்ளார். இந்நிலையில் முருகனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு திண்டுக்கல் எஸ்பி பிரதீப் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனடிப்படையில் கலெக்டர் சரவணன் முருகனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதை தொடர்ந்து போலீசார் முருகனை குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.
The post பழநியில் ெகாலை வழக்கில் கைதானவர் மீது குண்டாஸ் பாய்ந்தது appeared first on Dinakaran.