×

நியூசிலாந்து பிரதமர் 5 நாள் பயணமாக டெல்லி வருகை

புதுடெல்லி: நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் 5 நாள் பயணமாக நேற்று டெல்லி வந்தார். நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் நேற்று டெல்லி வந்தார். விமான நிலையத்தில் அவரை ஒன்றிய இணை அமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல் வரவேற்றார்.நியூசிலாந்து பிரதமருடன் அந்த நாட்டின் அமைச்சர்கள், தொழில்துறை பிரதிநிதிகள், இந்திய வம்சாவளியினர், எம்பிக்கள் அடங்கிய குழுவும் வந்துள்ளது. வரும் 20ம் தேதி வரை சுற்று பயணம் செய்யும் கிறிஸ்டோபர் லக்சன் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.

கிறிஸ்டோபர் கூறுகையில்,‘‘ இந்தியாவுடன் அதிகளவிலான ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். அதை நோக்கி நகர்வோம்’’ என்றார். இந்தியாவின் முதன்மையான மாநாடாக கருதப்படும் ரைசினா உரையாடலை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். கிறிஸ்டோபர் லக்சன் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். ரைசினா சர்வதேச உரையாடலில், புவிசார் அரசியல் மற்றும் பொருளாதாரம் பற்றி விவாதிக்கப்படும். இதில் 125 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

The post நியூசிலாந்து பிரதமர் 5 நாள் பயணமாக டெல்லி வருகை appeared first on Dinakaran.

Tags : New Zealand ,Delhi ,New Delhi ,Christopher Laxon ,Union Minister of State ,S.P. Singh Baghel ,Dinakaran ,
× RELATED தேச பாதுகாப்பில் சமரசம் கிடையாது: மனதின் குரலில் பிரதமர் மோடி பேச்சு