- தா. பஜூர் யூனியன்
- தா.பழூர்
- ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ
- கே. எஸ். கே. கன்னன்
- தா. பஜூர் பஞ்சாயத் ஒன்றியம்
- அரியலூர் மாவட்டம்
- தின மலர்
தா.பழூர், மார்ச் 15: அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் , ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் தா.பழூர் ஒன்றியத்தில் 2022 – 2023 ம் ஆண்டு மற்றும் 2023 – 2024ம் ஆண்டு ஆகிய ஆண்டுகளுக்கான திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இதில் முதலமைச்சரின் சாலைகள் மேம்பாட்டு திட்டம், சட்ட மன்ற மேம்பாட்டு நிதி திட்டம் , 15வது நிதிக்குழு மானியம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், பள்ளி கட்டமைப்பு திட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் நடைபெறும் பல்வேறு பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் தா.பழூர் ஒன்றியத்தில் நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன் (வட்டார ஊராட்சி), குணசேகரன் (கிராம ஊராட்சி) மற்றும் தா.பழூர் கிழக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post தா.பழூர் ஒன்றிய அலுவலகத்தில் அரசு வளர்ச்சி திட்ட பணிகள் appeared first on Dinakaran.