தா.பழூர், மார்ச் 14: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான காவல்துறையினர் முத்துவாஞ்சேரி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் அனுமதி மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி சென்ற போலீசார் முத்துவாஞ்சேரி கச்சக்கால் தெருவை சார்ந்த மணிகண்டன் (35) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிந்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அரியலூரில் அனுமதியின்றி மது விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.
