நத்தம், மார்ச் 14: நத்தம் கர்ணம் தெரு மதுரகாளியம்மன் கோயிலில் மாசி பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் அம்மனுக்கு பால், பழம், பன்னீர், குங்குமம், சந்தனம், விபூதி, இளநீர், தேன் உள்பட பல்வேறு வகை அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
The post நத்தம் கோயிலில் பவுர்ணமி பூஜை appeared first on Dinakaran.