×

நாராயணகுரு பொறியியல் கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம்

அருமனை,மார்ச் 13: மஞ்சாலுமூடு நாராயணகுரு பொறியியல் கல்லூரியில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. நாராயண குரு கல்லூரி தலைவர் பாலாஜி சித்தார்த், கல்லூரி நிர்வாக அறங்காவலர் அனுஜா பாலாஜி, கல்லூரி முதல்வர் டாக்டர் எம். சிவபிரகாஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். நிகழ்ச்சியில் சுதா பங்கேற்று பெண்களின் அதிகாரமளித்தல் மற்றும் தொழில் வளர்ச்சியை வலியுறுத்தினார்.

பாலின சமத்துவம் மற்றும் சமூகத்தை வடிவமைப்பதில் பெண்களின் பங்கு ஆகியவற்றை எடுத்துக்காட்டும் விவாதங்கள், செயல்பாடுகள் மற்றும் அங்கீகார தருணங்கள் கொண்டாட்டத்தில் இடம்பெற்றன. நிகழ்ச்சியையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

The post நாராயணகுரு பொறியியல் கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Women's Day ,Narayana Guru ,Engineering ,College ,Arumanai ,Narayana Guru Engineering College ,Manjalumoodu ,Narayana Guru College ,President ,Balaji Siddharth ,Anuja Balaji ,College Principal ,Dr. ,M. Sivaprakash ,
× RELATED பாலின பேதங்கள் ஒரு பார்வை