×

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே லட்சுமிபுரம் சுங்கச்சாவடியை பொதுமக்கள் சூறையாடியதால் பரபரப்பு!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே லட்சுமிபுரம் சுங்கச்சாவடியை பொதுமக்கள் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லட்சுமிபுரம் சுங்கச்சாவடியை சூறையாடிய பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லட்சுமிபுரம் சுங்கச்சாவடி இன்று திறக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அடித்து நொறுக்கப்பட்டது. பணிகளை முடிக்காமல் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

The post திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே லட்சுமிபுரம் சுங்கச்சாவடியை பொதுமக்கள் சூறையாடியதால் பரபரப்பு!! appeared first on Dinakaran.

Tags : Lakshmipuram ,Wattalakundu ,Dindigul district ,Dindigul ,toll booth ,
× RELATED விளாத்திகுளம் வட்டாரத்தில் சாலை விரிவாக்க பணி தீவிரம்