×

சென்னை மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி அறைகளில் சிக்கிய கஞ்சா; பயிற்சி மருத்துவர்கள் 3 பேர் கைது

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களின் விடுதி உள்ளது. இதில் ஏராளமான மருத்துவ மாணவர்கள் பயிற்சி மருத்துவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இதையடுத்து அந்த விடுதியில் கஞ்சா புழக்கம் இருப்பதாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் மாணவர் விடுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில் கேட்டமைன், கஞ்சா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விடுதியில் தங்கியிருக்கும் சில பயிற்சி மருத்துவர்கள் இதை பயன்படுத்தி வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக பயிற்சி மருத்துவர்கள் மூவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர். போதைப்பொருள் விநியோகம் செய்தது குறித்த விசாரணையில் சைதாப்பேட்டையைச் சேர்ந்த ரோட்னி ரோட்ரிகோ என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 1.4 கிலோ கிரீன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

The post சென்னை மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி அறைகளில் சிக்கிய கஞ்சா; பயிற்சி மருத்துவர்கள் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Ganja ,Chennai Medical College ,Chennai ,Chennai Central Railway Station ,Rajiv Gandhi Government Hospital ,Dinakaran ,
× RELATED சென்னை சினிமா ஸ்டண்ட் கலைஞரிடம் கஞ்சா பறிமுதல்