- திட்டச்சேரி அரசு பள்ளி
- நாகப்பட்டினம்
- ஹரிணி
- நிஷாந்தினி
- திட்டச்சேரி அரசு உயர்நிலைப்பள்ளி
- கேலோ இந்தியா வுஷு விளையாட்டுகள்
- கோயம்புத்தூர்
- தின மலர்
நாகப்பட்டினம், மார்ச் 11: திட்டச்சேரி அரசு உயர்நிலை பள்ளியை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவிகள் ஹரிணி, நிஷாந்தினி ஆகிய இரண்டு பேரும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான பெண்களுக்கான கேலோ இந்தியா உஷூ விளையாட்டு போட்டியில் கலந்து 2-ம் இடம் பெற்றனர்.
வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிகளுக்கு தலைமையாசிரியர் கல்யாணசுந்தரம் தலைமையில் பாராட்டு விழா நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டினர். உதவி தலைமை ஆசிரியர் நடராஜன், உடற்கல்வி ஆசிரியர்கள் நிர்மல்ராஜ், கவிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post மாநில அளவிலான உஷூ போட்டியில் திட்டச்சேரி அரசு பள்ளி மாணவிகள் சிறப்பிடம் appeared first on Dinakaran.
