×

மாசி களரி திருவிழாவில் 508 திருவிளக்கு பூஜை

கமுதி, மார்ச் 11: கமுதி அருகே மண்டலமாணிக்கம் கிராமத்தில் சுடலைமாடசாமி உடனுறை மாரியம்மன் கோயில் மாசிக் களரி திருவிழா குல தெய்வ வழிபாடு நடைபெற்றது. இதில் 508 திருவிளக்கு பூஜை கூட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பக்தி பாடல் பாடி வழிபட்டனர்.

முன்னதாக சுடலைமாட சுவாமி மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், விபூதி பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான மூலிகை திரவிய சிறப்பு அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. குலதெய்வ வழிபாட்டில் சென்னை, திருச்சி, தஞ்சை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை க்ஷத்திரிய நாடார்கள் உறவின் முறையினர் செய்திருந்தனர்.

The post மாசி களரி திருவிழாவில் 508 திருவிளக்கு பூஜை appeared first on Dinakaran.

Tags : 508 Thiruvilakku Pooja ,Masi Kalari Festival ,Kamudi ,Deity ,Sudalaimadasamy Udanurai Mariamman Temple ,Mandalamanickam ,
× RELATED நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி மாயம்