திருமங்கலம், மார்ச் 11: திருமங்கலத்தில் போதை பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நேற்று நடைபெற்றது. மதுரை மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டின் படி போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நேற்று திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் நடைபெற்றது. திருமங்கலம் கோட்டாச்சியர் (பொ) ராஜகுரு விழிப்புணர்வு பிரசாரத்தினை துவக்கி வைத்தார். மண்டல துணை வட்டாச்சியர் கேபாலகிருஷ்ணன், ஆர்ஐ செந்தில்குமார் முன்னிவை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் போதை பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து கரக்காட்ட குழுவினர் மூலமாக போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதனை பஸ்ஸ்டாண்டில் இருந்த பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
The post திருமங்கலத்தில் போதை விழிப்புணர்வு பிரசாரம் appeared first on Dinakaran.
