- சேலம்
- சுகாதார துறை
- முத்தமிழ்
- அச்சங்குட்டப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம்
- தெடாவூர் ஆரம்ப சுகாதார நிலையம்…
- தின மலர்
சேலம்: சேலத்தில் கருவில் இருக்கும் குழந்தை பாலினம் கணடறிந்த விவகாரத்தில், சிக்கிய ஆரம்ப சுகாதார நிலைய செவிலியரை டிஸ்மிஸ் செய்து சுகாதாரதுறை உத்தரவிட்டுள்ளது. சேலம் அருகே ஆச்சாங்குட்டப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் முத்தமிழ், தெடாவூர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கலைமணி ஆகியோர் ஸ்கேன் சென்டர் நடத்தி தலா ரூ.15ஆயிரம் வசூலித்து கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என 3 பெண்களுக்கு தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது. புகாரின்படி வீராணம் போலீசார், அரசு மருத்துவர் முத்தமிழ், செவிலியர் கலைமணி மற்றும் 6 இடைத்தரகர்கள் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த குற்றத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர் முத்தமிழ், செவிலியர் கலைமணி, உடந்தையாக செயல்பட்ட கிராம சுகாதார செவிலியர்கள் அம்பிகா வனிதா, வசந்தி, மங்கை, ராணி, கலைசெல்வி, மகேஸ்வரி ஆகிய 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த ஸ்கேன் மையத்திலிருந்து கருவை கலைக்க தகவல் தரப்பட்ட 3 தனியார் மருத்துமனைகளை மூடப்பட்டது. இது தொடர்பான அறிக்கையை சேலம் மாவட்ட சுகாதார அலுவலர்கள், தமிழ்நாடு அரசு இயக்குனருக்கு (மருத்துவ பணிகள்) அனுப்பினர். இந்த விவகாரத்தில் சிக்கிய தெடாவூர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கலைமணியை நிரந்த பணி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்து தமிழ்நாடு அரசு மருத்துவ பணிகள் இயக்குனர் ராஜமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
The post சேலத்தில் ஸ்கேன் சென்டர் நடத்தி கருவின் பாலினம் கூறிய செவிலியர் டிஸ்மிஸ்: சுகாதாரத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.
